Monday 20th of May 2024 04:36:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி உமையாள்புரத்தில் குழு மோதல்! நால்வர் படுகாயம்! ஒருவர் கவலைக்கிடம்!

கிளிநொச்சி உமையாள்புரத்தில் குழு மோதல்! நால்வர் படுகாயம்! ஒருவர் கவலைக்கிடம்!


கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் பகுதியில் சற்று முன்னர் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு மோதல் சம்பவத்தினால் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் ஏ - 09 நெடுஞ்சாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உமையாள்புரம் கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு தரப்புக்கு இடையிலான முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE